Category: What’s New

நற்கருணை கண்காட்சி

மணற்காடு பங்கில் இவ்வருடம் முதல்நன்மை பெறவுள்ள சிறார்களால் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வும்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வும் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்றது. சாவசக்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய…

மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. விக்டோரியா அவர்கள் வளவாளராக…

திருமண முன்னாயத்த வகுப்புக்கள்

யாழ். அகவொளி குடும்ப நல மையத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் திருமண முன்னாயத்த வகுப்புக்கள் கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றன. கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின்…

நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலய திருவிழா

அச்சுவேலி பங்கின் நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.…