விசுவமடு புனித இராயப்பர் ஆலய முதல்நன்மை
தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
