Author: admin

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் யாழ். மறைக்கோட்ட முதல்வராகவும் பேராலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பெனற் அவர்கள் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வராகவும் பரந்தன் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வராகவும்…

தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2025ஆம் கல்வியாண்டிற்குரிய தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2020ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலமெனவும் விண்ணப்ப…

நொச்சிமுனை புனித பேதுருவானவர் ஆலய திறப்புவிழா

குமுழமுனை பங்கிலுள்ள நொச்சிமுனை புனித பேதுருவானவர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…

புன்னாலைக்கட்டுவன் புனித இராயப்பர் ஆலய நூற்றாண்டு விழாவும் ஆலய திருவிழாவும்

புன்னாலைக்கட்டுவன் புனித இராயப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவும் ஆலய வருடாந்த திருவிழாவும் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம்…

அமரர் ஜேக்கப் றோமான் அவர்களின் புனரமைக்கப்பட்ட உருவச்சிலை திறப்புவிழா

குருநகர் சென். ஜேம்ஸ் கல்வி முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சென் ஜேம்ஸ் மகாவித்தியாலய முந்நாள் அதிபர் அமரர் ஜேக்கப் றோமான் அவர்களின் புனரமைக்கப்பட்ட உருவச்சிலை திறப்புவிழா கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென். ஜேம்ஸ் பெண்கள் கல்லூரியின் ஓய்வுநிலை…