விசுவமடு புனித இராயப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
தர்மபுரம் விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.