Author: admin

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

செபமாலைதாசர் சபை அருட்தந்தையும் அச்சுவேலி தோலக்கட்டி ஆச்சிரம முதல்வருமான அருட்தந்தை அலன் நிர்மலதாஸ் அவர்களின் அன்புத்தந்தையார் அருணாச்சலம் பங்கிராஸ் அவர்கள் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில்…

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து இந்திய இராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை…

மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

யாழ். பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. ‘பின்நவீனத்துவ சமுதாயப் பின்னணியில் மறைக்கல்வி’ எனும்…

திருவுளப்பணியாளர் சபை முதல்வர் இலங்கை மற்றும் இந்நியாவிற்கு மேய்ப்புப்பணி விஜயம்

திருவுளப்பணியாளர் சபை முதல்வர் அருட்தந்தை மார்க் ஆந்திரே அவர்கள் இலங்கை மற்றும் இந்நியாவிற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த 20ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்து பல்வேறு இடங்களிலுமுள்ள திருவுளப்பணியாளர் சபை பணித்தளங்களை தரிசித்துவருகின்றார். 20ஆம் திகதி இலங்கை நாட்டை வந்தடைந்த…

ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை கடற்படை கட்டளைதளபதி Vice Admiral பிரியந்த பெரேரா அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு யாழ். மறைமாவட்ட ஆயர்…