Author: admin

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மகிழ்வூட்டல் ஒருங்கிணைப்பு செயற்பாடு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட மகிழ்வூட்டல் ஒருங்கிணைப்பு செயற்பாடு புரட்டாதி மாதம் 27, 29, 30ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு, பூநகரி, கண்டாவளை…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. அத்துடன் மறைக்கல்வி…

மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி பட்டமளிப்பு

மன்னார் மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணியகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய சிறுவர் தினம் மற்றும் வாணிவிழா நிகழ்வுகள்

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் மற்றும் வாணிவிழா நிகழ்வுகள் ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான…