இராணுவ கட்டளை தளபதி லஸந்த ரொட்றிக்கோ, கோப்பாய் 51ஆம் படைப்பிரிவு கட்டளைத்தளபதி, யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாளர் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்புக்கள் ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றன.

