Month: September 2025

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குனர்…

புதுக்குடியிருப்புப் பங்கில் பரிசளிப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தேர்வில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர்…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய முதல்நன்மை

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

மல்லாவி பங்கு கள அனுபவ பயணம்

மல்லாவி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் புரட்டாதி மாதம் 5,6,7ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் அனுராதபுரம், மிகிந்தல, தம்புள்ள, கண்டி தலதா…

இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர் மன்றவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை…