தீவகம் சாட்டி பங்கிற்குட்பட்ட வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்படுத்தலில் யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயரின் செயலர் அருட்தந்தை ரெறன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 8 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.