சாட்டி திருத்தலத்தின் துணை ஆலயமான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தந்தையர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நலநிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரை, குறும்படம், அனுபவ பகிர்வு என்பவற்றினூடாக தந்தையர்களை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான தந்தையர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.