சாட்டி திருத்தல வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த மாதம் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 88 மறைக்கல்வி மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

அத்துடன் வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய இளையோர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.

பங்குத்தந்தையுடனான இவ் ஒன்றுகூடலில் 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin