அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களின் “விருத்தப் பாமழை ஆயிரம்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் திரு. சிவலிங்கராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான மதிப்பீட்டுரைகளை எழுத்தாளர் திரு. வடிவழகையன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் திருமதி மேரி மெக்டலீன் ஜெயக்கொடி ஆகியோர் வழங்கியிருந்தனர்.
பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் பத்மநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.