மன்னார் மறைமாவட்டம் வங்காலை புனித அன்னாள் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் பிகுறாடோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 77 பிள்ளைகள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin