போர்டோவின் யாழ் மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரி செறின் அனிற்றா சேவியர் அவர்கள் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

