யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
கௌரவிப்பு நிகழ்வில் இவ்வருடம் WhatsApp சமூக வலைத்தள செயலியூடாக ஊடாக மையத்தால் முன்னெடுக்கப்ட்ட தவக்கால பசாம் போட்டியில் பங்குபற்றி பற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் யாழ் மறை அலை தொலைக்காட்சியில் வாராந்தம் ஒளிபரப்பப்படும் வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஊடக மையத்தில் பணியாற்றும் மற்றும் உதவிபுரியும் நலன்விரும்பிகளுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

