யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா மார்கழி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சமூக வலைத்தளம் ஊடாக நடாத்தப்பட்ட தனிப்பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

