யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து, இவ்வாண்டில் பிறரன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசீரைப் பெற்றுக்கொண்டார்கள்.
ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். ஆயர் இல்லத்தில், 03ஆம் திகதி சனிக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றுள்ளதுடன் இச்சந்திப்பில் புனித வின்சன்ட் டி போல் சபையின் புலமைப்பரிசில் திட்டத்தினூடாக தரம் 5, கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

