யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க ஒளிவிழா மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான ஒன்றகூடலும் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றன.
திருப்பலியை நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
