யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் யாழ். மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 06 குழுக்கள் பங்குபற்றியிருந்தன.
இப்போட்டியில் பாண்டியன்தாழ்வு பங்கு முதலாமிடத்தையும் சுண்டுக்குளி பங்கு இரண்டாமிடத்தையும் நாவாந்துறை பங்கு மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

