யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை கமல்ராஜ் மற்றும் அருட்தந்தை றொகான் டியோனி ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. யான்கவி, திருமதி. சுனித்தா மற்றும் ஜோய் றோஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 70 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பங்குபற்றினர்.

By admin