இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருப்பலியை கல்லூரி ஆசிரியர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் லம்பேட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், ஆசிரியர், மாணவர்களென பலரும் கலந்து செபித்தனர்.