யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி மாணவர்களால் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.