யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த கலைவிழா நிகழ்வு யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஆயர் ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோகசரும் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநருமான திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. இம்மானுவேல் ஜோன்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

குழுப்பாடல், தனிநடனம், குழு நடனம், Action Play, மௌன நாடகம், கிராமிய நடனம், வில்லுப்பாடல், டொமினிக் சாவியோவின் வாழ்வை சித்தரிக்கும் நாடகம் என்பவற்றுடன் 2024 தேசிய விவிலிய வினாவிடை தேர்வில் தங்கபதக்கம், சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மற்றும் 2025 தேசிய விவிலிய வினாவிடை பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஆலய ஆன்மீக குரு அருட்தந்தை நீக்லஸ், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin