யாழ். திருமறைக்கலாமன்ற இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை ஐப்பசி மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் மன்ற கலைஞர்கள் திரு. ஜேம்ஸ் ஜெயகாந்தன், கொர்னேலியு கரன்சன் மற்றும் மானிப்பாய் மெமோரியல் கல்லூரி பிரதி அதிபர் திரு. இக்னீசியஸ் கிளனி ஆகியோர் வளவாளர்களாக கலந்து தலைமைத்துவ பயிற்சிகள், கருத்துரைகள், அரங்க பயிற்சிகள், ஆளுமை விருத்தி பயிற்சிகள், கிராமிய கலை பயிற்சிகள் ஊடாக பயிற்சிப்பட்டறையை நெறிபடுத்தினார்கள்.
