யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு போட்டி 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் பொன்னையா, தியோகு என இரு இல்லங்களாக பிரித்து நடாத்தப்பட்ட இப்போட்டியில் 100M, 200M, 400M ஓட்டம், புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்கள், அமலமரித்தியாகிகள் சபை புனித வளனார் சிறிய குருமடம் மற்றும் பிரான்சிஸ் சபை சிறிய குருமட மாணவர்களுக்கான அஞ்சலோட்டம், குருமட பணியாளர்களுக்கான அஞ்சலோட்டம், கயிறிழுத்தல், விநோத உடை போட்டிகள் என்பன இடம்பெற்றதுடன் விளையாட்டு போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட குழு விளையாட்டுக்கள் மற்றும் அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஓய்வுநிலை பிரதி அதிபர் திரு. சகாயராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
