கிளிநொச்சி பங்கிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
10ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றொய்ஸ்ரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை இருதயதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

