போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாகாண இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரிகள் மேரி ஜெரில்லா ஜெராட் இராசகுமார் மற்றும் தனோஜியா அன்ரன் அருள்ராஜ் ஆகியோர் தமது முதல் வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து அருட்சகோதரிகளுக்காக செபித்தனர்.

By admin