இரணைப்பாலை பங்கு மாத்தளன் புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.