மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
12ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தானர்.
வன்னி பெருநிலப்பரப்பின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அக்னெஸ் அன்னை ஆலயம் யாழ். மறைமாவட்ட திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

