மாங்குளம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த இறை இரக்க இறைதியான இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அத்தியான இல்ல திறப்புவிழா 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து தியான இல்லத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் தூய ஆவியார் திருவிழாவை சிறப்பித்து 07ஆம் திகதி சனிக்கிழமை இத்தியானத்தில் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனையும் இடம்பெற்றது.

இத்திருவிழிப்பு ஆராதனை சனிக்கிழமை மாலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருவிழிப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin