யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய சிறப்புப் பேரணி 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “திருஅவையின் மையமே அன்பியம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி பள்ளிமுனை புனித லூசியா அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலி நிறைவில் அன்பிய பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்த அன்பிய பணியாளர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் இப்பேரணியில் 600ற்கும் அதிகமான அன்பிய பணியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin