தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலய இயேசுவே ஆண்டவர் மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்தந்தையர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

வழிபாடுகளை தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin