கிராமிய உழைப்பாளர் சங்கமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்த மத நல்லிணக்கச் செயற்பாடு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் செல்வபுரம் சனசமூக நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சனசமூக நிலைய வளாகத்தில் ஒரு தொகுதி மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.
சமய தலைவர்கள், கிராம மக்களென பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.