மணியந்தோட்டம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மணியந்தோட்டம கர்த்தர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 78 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

