இந்தியா நாட்டிலிருந்து வருகைதந்து கடந்த 7 வருடங்களாக மணற்காடு பங்கில் பணியாற்றிவரும் லயன்சின் புனித வளனார் சபை கன்னியர்களின் பணியை மேம்படுத்தும் நோக்கோடு அங்கு அமைக்கப்பட்டு கன்னியர் மட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா யூன் மாதம் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை மாநில தலைவி அருட்சகோதரி லில்லி தோக்கனாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து கன்னியர் சபை மடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன், சபை முன்னைநாள் மாநில தலைவி அருட்சகோதரி செசிலி சவேரியார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.