மன்னார் மறைமாவட்ட மடு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றது.
மடு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் தலைமையில் ‘தூய ஆவியே எழுந்தருளி வாரும்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் 2026ஆம் ஆண்டு வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மேய்ப்புப்பணி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் மற்றும் மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்புரைகள் ஆற்றியதுடன், குழுஆய்வு, கலந்துரையாடல், பொது அமர்வு, ஆய்வுதிட்ட முன்மொழிவு என்பனவும் இடம்பெற்றன.

