நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இன்றைய தினம் காலை குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித நீரூற்றை நோக்கிய மெழுகுதிரி பவனியும் மருதமடு அன்னையின் சிற்றாலயத்தில் வழிபாடும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து மாலை திருவிழா திருப்பலியும் நடைபெற்றன.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் புலம்பெயர் மக்கள் பலரும் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

By admin