கட்டைக்காடு பங்கின் புல்லாவெளி புனித செபஸ்தியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை எட்வின்நாதன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

