தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தேர்வில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 47 மாணவர்கள் சிறப்பு பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.
மறை அறிவை மேம்படுத்தும் முகமாக நடாத்தப்பட்ட இப்பரீட்சைக்கு 200 மாணவர்கள் தோற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.