தீவகம், புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய சிற்றாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இச்சிற்றாலயத்திற்கான கட்டுமானப்பணிகள் முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் காலத்தில் நிறைவடைந்துள்ளது.

By admin