தீவகம் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி றொக் பஸ்ரியன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.