புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09, 10ஆம் திகதிகளில் நடைபெற்றது.
09ஆம் திகதி திங்கட்கிழமை பீடப்பணியாளர்கள் முழங்காவில் இரணைமாதாநகர் செபமாலை அன்னை ஆலயத்தை தரிசித்து அவ்வாலய பீடப்பணியாளர்களுடன் சிநேகபூர்வமான கரப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
தொடர்ந்து 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலி நிறைவில் பீடப்பணியாளர்கள் சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயத்தை தரிசித்தனர்.
மீண்டும் இரணைமாதாநகர் செபமாலை அன்னை ஆலயத்திற்கு திரும்பிய பீடப்பணியாளர்கள் அங்கு நடைபெற்ற காற்பந்தாட்டம் போட்டியில் பங்குபற்றியதுடன் பூநகரி கடற்கரையையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 15 பீடப்பணியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.