மல்லாவி பங்கிற்குட்பட்ட பாலிநகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
25ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை சலேசியன் சபை அருட்தந்தை பத்தியா அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.