மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் ஆவணி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதி வரை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற தியானத்தில் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆராதனை, குணமாக்கல் வழிபாடு, பாவசங்கீர்த்தனம், தியான உரைகள் என்பன இடம்பெற்றன.

இத்தியானத்தை இறையிரக்க தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட், அருட்தந்தையர்கள் சேவியர், சஜீ, அன்ரனி ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin