பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் திருப்பலி நிறைவில் 2024ஆம் ஆண்டு தேசிய விவிலிய பரீட்சையில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

தொடர்ந்து மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin