பாசையூர் புனித அந்தோனியார் ஆலய 175ஆவது யூபிலி ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டதுடன் 175ஆவது யூபிலி ஆண்டை சிறப்பித்து ஆலய முன்வீதியில் அமைக்கப்பட்டுவந்த வரவேற்பு வளைவும் பங்குத்தந்தை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து 4ஆம் திகதி புதன்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியதுடன் அன்று மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் அங்கு இடம்பெற்றன.