பண்டத்தரிப்பு பங்கில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் தலைமையிலான குழுவினர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 13 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin