நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டை முன்னிட்டு பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதன் ஒரு செயற்பாடாக தொழிற்சாலை பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் தொழிற்சாலை பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டதுடன் திருப்பலி நிறைவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin