சலேசியன் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டம், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரிகளான அருள்நேசன் மரிய ஜெனட் நாயகி, இம்மானுவேல் கமலின் றியாலினி ஆகியோர் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.