நாவாந்துறை பங்கில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூன் மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

நாவந்துறை பங்கு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுஸன் அவர்களின் தலைமையில் சாட்டி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், நற்கருணை ஒப்புரவு அருட்சாதனங்கள் தொடர்பான உரைகள், குழுச்செயற்பாடுகள் என்பவற்றுடன் உவமைகளை நடிப்பின் ஊடாக வெளிப்படுத்தல் போன்றன இடம்பெற்றன.

காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் 24 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பங்குபற்றினர்.

By admin